தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுடின் இளம் சுப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹசனுடன் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகின்றார்.மிர்ச்சி இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மே 30 ஆம் தேதி முதல் துவங்கும், இப்படத்தினை அடுத்த வருடம் சங்கராந்தி பண்டிகை அன்று வெளியிட இயக்குநர் ஸ்ரீகாந்த் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரையின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் கபார் சிங் 2 படமும் 2016 சங்கராந்தி பண்டிகைக்கு வெளிவரும் வகையில் திட்டமிடப்பட்டு வருகின்றது. பவர் புகழ் ரவீந்திர கபார் சிங் 2 படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். திட்டமிட்ட படி இவ்விரு படங்களும் 2016 ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு திரைக்கு வந்தால் தெலுங்கு திரை ரசிகர்களுக்கு அது பெரிய திரை விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.