10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
இந்த செய்திக்குள் போவதற்கு முன் ஒரு சின்ன பிளாஸ்பேக்கை பார்ப்போமா..? நான்கு வருடங்களுக்கு முன் பிருத்விராஜ் ஆக்சன் படங்களாக நடித்து வந்த நேரத்தில், அதிலிருந்து கொஞ்சம் விடுபட்டு ஆசுவாசம் தேட நினைத்தார். அந்த நேரத்தில் தான் இயக்குனர் ரஞ்சித் அவரை அழைத்து ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கரை மையப்படுத்தி, தான் தயார் செய்திருந்த கதையை சொன்னார். பிருத்விராஜின் மனதில் அந்தக்கதை பச்சக்கென ஒட்டிக்கொள்ள, அதுதான் 'இண்டியன் ரூபி' என்கிற பெயரில் படமாகவும் வெளியானது. அது வெற்றிப்படமானதோடு மட்டுமல்ல, பிருத்விராஜுக்கு நடிப்புலகில் புதிய வாசலையும் திறந்துவிட்டது.
அந்த நட்பின், நன்றியின் அடிப்படையில் தான் தற்போது ரஞ்சித் அழைப்பை ஏற்று மோகன்லாலை வைத்து அவர் இப்போது இயக்கிவரும் 'லோஹம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் பிருத்விராஜ். இந்தப்படத்தில் அவருக்கு சிட்டி போலீஸ் கமிஷனர் வேடம். இந்தப்படத்தில் பிருத்விராஜ் தவிர சில நடிகைகளும் காமெடி நடிகர்களும் கூட கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்களாம்.. இந்தப்படம் தவிர்த்து அடுத்ததாக 'கனல்' என்கிற படத்தில் படம் முழுவதும் மோகன்லாலுக்கு இணையான ரோலில் நடிக்க உள்ளார் பிருத்விராஜ்.