தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான், என, கிராமி விருது பெற்ற, பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் வுட்டர் கெல்லர்மேன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பிரபலமான புல்லாங்குழல் இசைக் கலைஞர், வுட்டர் கெல்லர்மேன். திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ஏராளமான ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். சிறந்த இசையமைப்புக்காக, கிராமி விருதையும் பெற்றுள்ளார்.
இசை நிகழ்ச்சி தொடர்பான விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் எனக்கு பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்; இதற்கான காரணம் உண்டு. அவரை போல், யாராலும் இசையமைக்க முடியாது; அவரின் சில இசைக்கோர்வைகளை போல், நானும் இசையமைக்க நினைத்தேன்; முடியவில்லை. தற்போது, லவ் லாங்குவேஜ் என்ற பெயரில், புதிய ஆல்பம் ஒன்றை தயார் செய்து வருகிறேன். இதில், பல்வேறு கலாசாரங்களை இசை மூலமாக வெளிப்படுத்தி உள்ளேன். இதில், 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பல மொழிகளில் இந்த பாடல் வரிகள் உள்ளன; இரண்டு இந்திய மொழிகளிலும் பாடல்கள் உண்டு.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், பல ஆண்டுகளுக்கு முன், தென் ஆப்ரிக்காவில் வசித்து வந்தார். அவர், என்னுடைய நெருங்கிய தோழியாக இருந்தார். அவர் மூலமாகவே, இந்திய கலாசாரங்கள் பற்றியும், இசை பற்றியும் எனக்கு தெரிந்தது. அதனால் தான், இந்திய இசை மீது எனக்கு ஆர்வம் வந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.