தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில், கோவில் திருவிழாக்களுக்கு யானைகளை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டிக்கு, ஹாலிவுட் நடிகை பமீலா ஆன்டர்சன் கடிதம் எழுதி உள்ளார்.
கேரளாவில், கோவில் திருவிழாக்களுக்கு யானைகளை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக, திருச்சூர் பூரம் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு பிரபலமானது. இந்நிலையில், ஹாலிவுட் நடிகையான பமீலா ஆன்டர்சன், கேரள காங்., கூட்டணி அரசின் முதல்வரான உம்மன் சாண்டிக்கு, இ-மெயில் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு எதிராக, இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கேரள திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது, விழாக்களை காண வரும் பார்வையாளர்களையும் அதிருப்தி அடைய வைக்கிறது. யானைகளை சங்கிலிகளால் கட்டிப் போடுவதும், வெப்பமான நடைபாதைகளில் அவற்றை நடக்கச் செய்வதும், அங்குசம் அல்லது இதர ஆயுதங்கள் மூலம் அவற்றை துன்புறுத்துவதும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. யானைகளுக்கு பதிலாக, அதே அளவு உயரத்திற்கு மூங்கில் உட்பட, சில வகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொம்மை யானைகளை, விழாக் களுக்கு பயன்படுத்தலாம். அதற்கான செலவுகளை ஏற்க, விலங்கு நல அமைப்பான, பீடாவும் தயாராக உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆன்டர்சனின் இந்தக் கடிதத்தை, பீடா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: விலங்குகளை அடிப்பதும், துன்புறுத்துவதும் சட்ட விரோதம். கொடுமையான பயிற்சிகளுக்குப் பின்னரே, திருவிழாக்களின் போது நடைபெறும் அணிவகுப்புகளில், யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ், யானைகளை பிடிப்பது தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், காடுகளில் இருந்து, சட்ட விரோதமாக யானைகள் பிடிக்கப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பப்படுவது தொடர்கிறது. இது, தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.