ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முயற்சிதான் தங்களது வெற்றிக்கு உண்மையான காரணம் என்பது வெற்றி பெற்றவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். அப்படி ஒரு வெற்றியைப் பெற்று இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இன்றைய சில முன்னணி நடிகர்களும் ஒரு காலத்தில் ஒரு சில காட்சிகளில் தலை காட்டியவர்களாக, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்களாக இருந்தவர்கள்தான். அவர்களது கடுமையான உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள்.
விஜய் சேதுபதி நாயகனாக நடித்த முதல் படம் 'தென்மேற்குப் பருவக்காற்று'. அந்தப் படத்திற்கு முன்பே சில படங்களில் அவர் 'தலை' காட்டி நடித்திருக்கிறார். அவற்றில் ஒரு படம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயனாக நடித்த 'புதுப்பேட்டை'. அந்தப் படத்தில் அடியாட்களில் ஒருவராக விஜய் சேதுபதி நடித்திருப்பார்.
அன்று தனுஷுடன் அடியாட்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்த விஜய் சேதுபதி, இன்று தனுஷ் தயாரிப்பில் தனி நாயகனாக 'நானும் ரௌடிதான்' படத்தில் நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார். இதற்கு விஜய் சேதுபதியின் முயற்சியும், நடிப்புத் திறமையும்தான் காரணம்.