மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமாவில் முதலில் தோல்வியை ருசிப்பவர்கள்தான் பின்னர் நல்லதொரு வெற்றியைப் பெற்று முன்னணிக்கு வருகிறார்கள். இது பலருக்கும் பொருந்தும் ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது. இன்று தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமான போது பெரிய வரவேற்பு இல்லை. அவர் நாயகியாக அறிமுகமான 'பாணா காத்தாடி', அடுத்து வெளிவந்த 'மாஸ்கோவின் காவிரி' ஆகிய படங்கள் அவருக்குத் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகி 2012ல் வெளிவந்த 'நான் ஈ' படம் வெற்றி பெற்ற பிறகுதான் தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பார்வை சமந்தா பக்கம் திரும்பியது. அதைத் தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான்' ஆகிய படங்கள் மீண்டும் தோல்வியடைய சமந்தாவின் தமிழ்த் திரையுலக மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டது. ஆனாலும், விஜய் ஜோடியாக சமந்தா நடித்து வெளிவந்த 'கத்தி' படம் அவரை மீண்டும் காப்பாற்றியது. இடையில் நிறைய தெலுங்குப் படங்களில் நடித்து, அதில் பல படங்கள் வெற்றியடைய சமந்தா தெலுங்கின் முன்னணி ஹீரோயினாக மாறினார். தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை தங்களது அபிமான நாயகிகளில் ஒருவராக கொண்டாட ஆரம்பித்தனர். சமீபத்தில் வெளிவந்த 'சன் ஆப் சத்தியமூர்த்தி' படம் வரை அவரது வெற்றி ராசி தெலுங்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.