பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானபோதும், உன்னைச்சரணடைந்தே என்ற படத்தை தயாரித்த எஸ்.பி.பி.சரண் அந்த படத்தில் தானும் ஒரு வேடத்தில் நடித்தார். அதையடுத்து, சரோஜா, துரோகி, வானவராயன் வல்லவராயன் என பல படங்களில் நடித்தார். அதேசமயம், நடிப்பு, தயாரிப்பு என்று பல பாதைகளில் பயணித்தபோதும் சினிமாவிலும் தொடர்ந்து பாடி வந்த சரண், தற்போது இந்தியா பாகிஸ்தான் என்ற படத்திற்காக பாடலாசிரியர் அண்ணாமலை எழுதியுள்ள, ஒரு பொண்ணை பார்த்தேன் மாமா, அவ கொன்னுபுட்டா ஆமா -என்ற ஒரு கலக்கலான பாடலை பாடியிருக்கிறார். இந்த ஜாலியான பாடலை தனது வழக்கமான குரலில் பாடாமல் தனது குரலை வித்தியாசப்படுத்தி பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.சரண். இந்த பாடல் இணைய தளத்தில் வெளியானதை அடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள். அதனால், அப்பாடலை எழுதிய அண்ணாமலை, பாடிய எஸ்.பி.பி.சரண், இசையமைத்த தீனா தேவராஜன் ஆகியோர் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.