டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுவாமி ரா ரா மற்றும் தோசெய் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சுதீர் வர்மா தற்போது ஒரு டிரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது கிரைம் கதையில் காதலை அழகாக சொல்லி வெற்றி படத்தை எப்படி இயக்க முடியும் என்பதற்கு உதாரணமாக சுதீர் வர்மா திகழ்வதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாதிக்க துடிக்கும் புதிய இளம் இயக்குனர்களில் பலர் இந்த பார்முலாவை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். இந்த இரண்டு படம் தந்த நம்பிக்கையும், நல்ல பெயரும் இயக்குனர் சுதீர் வர்மாவை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது அவர் தனது மூன்றாவது படத்தில் மிகப்பெரிய ஹீரோவுடன் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை சந்தித்து கதை சொல்ல இருப்பதாக கூறப்படுகின்றது. தோசெய் படத்தை பார்த்த பிரபல ஹீரோவான நாகர்ஜுனும் இயக்குனர் சுதீர் வர்மாவை பாராட்டி விட்டு, இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார். அதாவது சுதீர் வர்மாவிடம், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை போனில் தொடர்பு கொள்ளலாம். என்னிடம் கதையை சொல்லலாம், நாகர்ஜுன் கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் சுதீர் வர்மா பிரபல ஹீரோவுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.