மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நம்ம தமிழ் திரையுலகில் மேலே சொன்ன விஷயம் சாத்தியமா..? நிச்சயமாக இல்லை.. காரணம் தன்னை வைத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கூட, கொஞ்சம் சரிவை சந்தித்தால், அவருக்கு ஒரு படம் நடித்து தந்து அவரை கைதூக்கிவிடும் மனோபாவம் கொஞ்சம் கூட இங்கிருப்பவர்களிடம் இல்லை. ஆனால் 18 வருடமாக படம் இயக்காத ஒரு இயக்குனரை அழைத்து மோகன்லால் வாய்ப்பு தந்துள்ளார் என்றால் அவர் மீது மோகன்லால் எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார் பாருங்கள்..
அந்த இயக்குனரின் பெயர் பி.அனில். 25 வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து இயக்கிய 'அடிவேருகள்' என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் தான் இந்த அனில்.. மோகன்லாலை வைத்து மட்டுமே தொடர்ந்து நான்கு படங்களை இயக்கியுள்ள அனில் கடைசியாக 1997ல் சுரேஷ்கோபியை வைத்து, 'சூர்யகாந்தி' என்கிற படத்தை இயக்கியதோடு பீல்டை விட்டு ஒதுங்கியிருந்தார்.