ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் விஷ்வ இந்து பரிஷித்து சார்பில் எஸ்.ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்தில் என் உதிரத்தின் விதை... என்றொரு பாடலில் வெங்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள் என்ற வரி வருகிறது. தீய சக்திகளை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவுள் கடவுள் பல்வேறு அவதாரங்கள் எடுத்து இருக்கிறார். அப்படியிருக்கையில் இந்த வரி இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும், நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே என் உதிரத்தின் பாடலில் இருந்து வெக்கங்கெட்டு என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று தணிக்கை துறை மற்றும் தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 6ம் தேதி புகார் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் மே 1ம் தேதி உத்தம வில்லன் படம் வெளியாகிறது. எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று(ஏப்., 27ம் தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.