தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது, அது இங்குள்ள கலைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் ராஜ் டி.வி. வருகிற மே 4ந் தேதி முதல் அழகிய லைலா என்ற புதிய டப்பிங் சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
பார்வதியும், ருத்ராவும் பால்ய பருவத்திலிருந்தே நண்பர்கள், இருவரும் வளர்ந்து பெரியவர்களானதும் ருத்ரா ராணுவ தளபதியாகிறான். பார்வதி, ருத்ராவை காதலிக்கிறாள். ஆனால் ருத்ரா நாடுதான் முக்கியம் என்று சொல்லி காதல், பாசம், சென்டிமென்ட்டுக்கு அப்பாற்பட்டு வாழ்கிறான். ருத்ராவின் காதலை பெற பார்வதி தொடர்ந்து போராடுவதுதான் சீரியலின் கதை.