பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன், பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி நடிக்கும் மாஸ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். டீசர் பற்றிய ஒரு பார்வை...
ஏற்கெனவே கசிந்த கதைதான் டீசரில் எதிரொலிக்கிறது. கொடூர வில்லன்களால் கொல்லப்படும் சூர்யா, ஆவியாகவோ, காட்டேரியாகவோ, சக்தி வாயந்த அமானுஷ்ய சக்தியாகவோ மீண்டும் வந்து எதிரிகளை பழிவாங்குகிற கதை.
டீசரின் துவக்கத்தில் வரும் "எதிர்பார்க்கலல்ல... நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல. அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல" என்கிற வசனமும், டீசரின் முடிவில் பிரேம்ஜி "இந்த வீட்டில் இரண்டு நாளா ஏதோ அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது" என்று குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்த சூர்யா சுவரில் நடக்கிற காட்சிகளும் காட்டேரி போன்று சிங்கப்பல் காட்டி சிரிகிற காட்சியும் இதனை உறுதிப்படுத்துகிறது.
கதையின் ஒரு பகுதி வெளிநாட்டில் நடக்கிறது என்பதையும் டீசர் உறுதிப்படுத்துகிறது. பாடல் காட்சிகள் பிரமாண்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகனி வித்தியாசமான கெட்அப்பில் வில்லனாக வருகிறார். பார்த்திபன் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.