தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் பலர் டபுள் ரோல் செய்திருப்பார்கள். சினிமாத்துறையில் டபுள் ரோல் செய்பவர் 'நட்டி' என்கிற நட்ராஜ். பாலிவுட்டில் நம்பர் ஒன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்கும் நட்ராஜ் இன்னொரு பக்கம் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். 'சதுரங்க வேட்டை' மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நட்ராஜ் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'புலி' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
புலி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திதை எட்டியுள்ளநிலையில் விரைவில் புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம் நட்ராஜ். தலக்கோணம் பகுதியில் 'புலி' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராமு என்பவர், நட்ராஜிடம் கதை ஒன்றைக் கூறியுள்ளார். அக்கதை நட்ராஜுக்குப் பிடித்துப்போகவே அந்தக்கதையில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நட்ராஜ்.
நட்ராஜுடன் 'மூடர்கூடம்' புகழ் ரஜாஜியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். 'என்னை அறிந்தால்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பார்வதி நாயரிடம் இப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். 1980 களில் கதை நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் ராமு.