டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொதுவாக மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர் மணிரத்னம். தன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மட்டும் மீடியாக்களிடம் பேச முன் வருவார். அப்படி பேசும்போது தன் படம் பற்றி மட்டுமின்றி பிற விஷயங்கள் பற்றியும் பேசுவார்.
அதன்படி தன்னுடைய ஓ காதல் கண்மணி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனபோது, அதற்கு முன்னதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்.
பிரபல வாரப்பத்திரிகை ஒன்றுக்கு மணிரத்னம் பேட்டியளித்தபோது, இளம் இயக்குநர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, இளம் இயக்குநர்களில் தன்னைக் கவர்ந்தவர் கார்த்திக் சுப்பராஜ் என்று கூறி இருக்கிறார். மணிரத்னத்தின் இந்தக் கருத்து ஏனைய இளம் இயக்குநர்களை கொந்தளிக்க வைத்துவிட்டதாக கேள்வி.