ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விளையாட்டைப் பற்றி விளையாட்டாக படம் எடுத்து தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய தடத்தைப் பதித்த படம் 'சென்னை 28'. யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக வெங்கட் பிரபு இயக்கிய படம். முன்னணி நட்சத்திரங்கள் என யாருமேயில்லாமல் ஒன்றிரண்டு படங்களில் தலை காட்டியவர்கள், புதுமுகங்கள் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் சரியாக 8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளிவந்த படம் 'சென்னை 28'.
எங்க படத்துல கதையே இல்லை என உண்மையைச் சொல்லி, வெறும் சம்பவங்களாலேயே ஒரு படத்தைக் கொடுத்து இப்படியும் கூட ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்த படம் அது. யுவன்ஷங்கர் ராஜா மட்டுமே அந்தப் படத்தில் அதிகம் தெரிந்த முகமாக இருந்தார். முக்கிய கதாபாத்திரங்களில், ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அஜய் ராஜ், விஜயலட்சுமி, இளவரசு என பலர் நடித்திருந்தனர்.
நகைச்சுவை இழையோடிய திரைக்கதை, கலகலப்பான கதாபாத்திரங்கள், யதார்த்தமான காதல், அருமையான நட்பு இவையனைத்தும்தான் அந்தப் படம் வெற்றியடைய காரணமாக அமைந்தது. அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இன்று தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.