12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியின் இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக தெலுங்கு மீடியாக்களில் த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவர்கள் இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப் போகவில்லை என்றும், கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், அதனால் 'பிரேக்-அப்' ஆகிவிட்டது என்றும் சொல்கிறார்கள். அதோடு 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பின் த்ரிஷாவுக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் த்ரிஷா தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறாராம். அது வருண்மணியனுக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.
இதனிடையே, சமீபத்தில் வருண்மணியன் வீட்டில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவிற்கு த்ரிஷா செல்லவில்லையாம். அதோடு நிச்சய மோதிரத்தையும் த்ரிஷா அணியாமலேயே இருக்கிறார் என தெலுங்கு மீடியாக்கள் காரணம் சொல்கின்றன.