டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
38 வயதில் ஹார்ட் அட்டாக் வருமா..? வந்திருக்கிறதே.. அதுதான் மலையாள நடிகரும், சிறந்த கதாசிரியருமான முரளிகோபியின் மனைவி அஞ்சனாவின் உயிரையும் பறித்துவிட்டது. 38 வயதான அஞ்சனா, ஸ்டேட் பாங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர். நேற்று வழக்கம்போல தங்களது இரு குழந்தைகளை ட்யூசன் சென்டரில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அஞ்சனாவுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு முன்பே உயிர் பிரிந்தது.
முரளிகோபி, அஞ்சனா தம்பதியினருக்கு பத்தாவது படிக்கும் கௌரி என்கிற மகளும் 2வது படிக்கும் கௌரவ் என்கிற மகனும் உள்ளனர். மறைந்த பிரபல நடிகர் பரத்கோபியின் மகன் தான் இந்த முரளி கோபி. பெரும்பாலும் மீடியாகுள் முன்போ, அல்லது விழாக்களிலோ முரளிகோபி குடும்பத்துடன் கலந்துகொண்டது இல்லை. தற்போதுதான் மிக பிஸியாக படங்களில் நடித்தும், கதை எழுதியும் வருகிறார் முரளிகோபி. இந்த இளம் வயதிலேயே அவரது மனைவியின் அதிர்ச்சி மரணம் அவரை மட்டுமல்ல, மலையாள திரையுலகையும் உலுக்கியுள்ளது. இன்று முற்பகல் அஞ்சனாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது.