போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் பெர்னான்டஸ், இலங்கையை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே... ஜாக்குலின் தற்போது அக்ஷய் குமார் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகிவரும் பிரதர்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜாக்குலின் நடிப்பில் உருவாகியுள்ள அக்கார்டிங் டூ மேத்யூ என்ற சிங்களமொழி படம், வரும் ஜூலை மாதத்தில் வெளிவர உள்ளது. இந்நிலையில், அதே படக்குழுவினர் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க ஜாக்குலின் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்குலின், தற்போதைய நிலையில், பாலிவுட்டை தவிர்த்து, தனது தாய்மொழி படங்களிலேயே அதிக பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்ஷேவை ஆதரித்து, இலங்கையின் பல பகுதிகளில், ஜாக்குலின் பெர்னான்டஸ், சல்மான் கான் உடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது நினைவிருக்கலாம்....