தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நகுல், நிகிஷா படேல், ஸ்ருதி ராமகிருஷ்ணன், பிரேம்ஜி நடிக்கும் படம் நாரதன். நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். சஞ்சய் லோகநாத் ஒளிபதிவு செய்கிறார், மணிசர்மா இசை அமைக்கிறார். இந்த படத்துக்காக சென்னை நகருக்குள் 10 நாட்கள் ரன்னிங் சேசிங் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறியதாவது: பொள்ளாச்சியை சேர்ந்த நகுல் ஒரு இண்டர்வியூவிற்காக சென்னை வருகிறார். சென்னையில் அவரது தாய்மாமன் ராதாரவி நல்ல வசதியோடு இருக்கிறார். அவர் வீட்டில் தங்கியிருந்து இண்டர்வியூ அட்டர்ன் செய்யும் திட்டத்தோடு வருகிறார். வரும்போது உடன் பயணிக்கும் நிகிஷா படேலை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார். சென்னை வந்ததும் நிகிஷா ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்ட தகவல் கிடைக்க அவரை காப்பாற்ற ஓடுகிறார். தன் மகளை நகுலுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்துடன் இருக்கும் ராதராவி. அவரை பின் தொடர்ந்து தனது அடியாட்களை அனுப்பி வைக்கிறார். நகுலையும் நிகிஷாவையும் ஒரு பக்கம் வில்லன்கள் துரத்த, இன்னொரு பக்கம் ராதாரவியின் ஆட்கள் துரத்துகிறார்கள்.