'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கியவர் மீரா கதிரவன். அவர் தற்போது விழித்திரு என்ற படத்தை இயக்கி வருகிறார். கிருஷ்ணா, விதார்த், தன்சிகா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த படத்துக்கு சத்யன் என்பவர் இசையமைத்தாலும், டி.ராஜேந்தரும் ஒரு பாடலை எழுதி இசையமைத்து, பின்னணி பாடியிருக்கிறார். அதோடு அந்த பாடலில் அவரே நடனமாடப்போகிறாராம். வல்லவன் படத்தில் நயன்தாரா-ரீமாசென்னுடன் இணைந்து சிம்பு ஆடிய, அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தறியாடி -என்ற பாடல் போன்று இந்த பாடலில் டி.ராஜேந்தர் நடனமாடுகிறாராம்.
அவருடன், பிரபல மும்பை கவர்ச்சி நடிகை சனாசூரி மற்றும் சலீம் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த அஸ்மிதா ஆகிய இருவரும் இணைத்து கவர்ச்சி குத்தாட்டம் போடுகிறார்களாம். வல்லவன் படத்தில் சிம்பு ஆடிய ஆட்டத்துக்கு துளியும் குறைவில்லாத எனர்ஜியுடன் அந்த பாடலில் நடனமாட தயாராகிக் கொண்டிருக்கிறாராம் டி.ஆர்.,