தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகை காவ்யா மாதவன் கவிதை எழுதுவார் என்பது நமக்கு தெரியும்.. அவ்வளவு ஏன் தனது கவிதைகளை எல்லாம் தொகுத்து 'காவ்யதாளங்கள்' என்ற பெயரில் இசை ஆல்பமாகவும் கூட வெளியிட்டார். அதற்கு இசையமைத்தவரும் கூட அவரே தான். இதுதவிர 'மேட்னி' என்கிற படத்தில் 'மௌனமாயி மனசில்' என்கிற பாடலையும் பாடியுள்ளார். அவரை பல பேர் தங்களது படங்களுக்கு பாடல்கள் எழுத சொல்லியும், ஏனோ அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
ஆனால் தற்போது அவர் நடித்துள்ள 'ஆகாசவாணி' திரைப்படம் கவிஞராக மட்டும் இருந்த அவரை, திரைப்பட பாடலாசிரியராகவும் மாற்றியுள்ளது. இதற்கு காரணம் காவ்யா மாதவனின் தோழியான சுஜா கார்த்திகா என்பவர்தான்.. அவரது தம்பி சங்கு என்பவர் அடிக்கடி, தான் இசையமைக்கும் ட்யூன்களை காவ்யா மாதவனுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார். அப்படி அனுப்பிய ட்யூன் ஒன்று, தான் நடித்துவரும் 'ஆகாசவாணி' படத்திற்கு சரியாக பொருந்துவது போல் காவ்யாவுக்கு தோன்றியதாம்.
இதை சங்குவிடம் சொல்ல, அவரோ காவ்யா மாதவனே இந்த ட்யூனுக்கு பாட்டெழுதினால் நன்றாக இருக்கும் என்று சொன்னாராம். ஆனால் காவ்யாவோ அவர் எதோ ஜோக்கடிக்கிறார் என நினைத்து, படத்தின் இயக்குனர் தயாரிப்பாளரிடம் இதுபற்றி ஏதேச்சையாக பேசும்போது கூறியுள்ளார். ஆனால் அவர்களோ இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு காவ்யா மாதவனை பாட்டெழுத வைத்துவிட்டார்கள். காவ்யா மாதவனுக்கு படத்தின் கதையோட்டம் நன்கு தெரியும் என்பதால் பாடல் வரிகளும் அருமையாக வந்துள்ளதாம்.