மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
அஞ்சான் படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வெளிவரும் மாஸ் படம் பற்றிய அதிக எதிர்பார்ப்பு இருக்கிறதென்றால் அதற்கு இயக்குனர் வெங்கட்பிரபுவும் ஒரு காரணம். ஆனானப்பட்ட அஜித்துக்கே மங்காத்தா படத்தின் மூலம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அஜித்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் வெங்கட்பிரபுவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி திரையுலகத்திலேயே பலரும் பொறமைப்பட்டார்கள். அப்படி என்ன எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், மங்காத்தா படத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அற்புதமான மசாலா ஹிட்டாக வெங்கட்பிரபு கொடுத்தார்.
அதே போல, அஞ்சான் படத்தின் மிகப் பெரும் தோல்விக்குப் பிறகு சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறாரே என மீண்டும் ஒரு கூட்டம் சந்தேகத்தை எழுப்பியது. அஜித், வெங்கட் பிரபு மீது வைத்த அதே நம்பிக்கையை, சூர்யாவும் வைத்தார். அதன் ரிசல்ட் இன்று வெளியான மாஸ் படத்தின் டீசரிலேயே தெரிந்துவிட்டது. யுவனின் பின்னணி இசையில், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், ஒரு பரபரப்பான டீசரைக் கொடுத்து பலரையும் வாயடைக்கச் செய்துவிட்டார் வெங்கட் பிரபு.
டீசரின் ஆரம்பத்திலேயே அஞ்சான் படத் தோல்விக்காக தன்னைப் பற்றி ஏளனமாகப் பேசியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “எதிர்பார்க்கலை இல்லை, நான் திரும்ப வருவன்னு எதிர்பார்க்கலை இல்லை, அதுவும் இப்படி வருவன்னு எதிர்பார்க்கலை இல்லை, ” என அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக டீசரின் ஆரம்பத்தில் சூர்யாவின் குரலில் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.