தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் வெளிவந்த இதிகாசம் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர் ஸ்வப்னா. இவர் தற்போது தமிழில் தயாராகும் 9 டூ 10 என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். காந்தர்வன் படத்தில் நடித்த கதிர் ஹீரோ. இவர்கள் தவிர இயக்குனர் ஷரவண சுப்பையா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் பிச்சையெடுக்கும் தயாரிப்பாளராக நடித்த முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் விஜய் சண்முகவேல் இயக்குகிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் இசை அமைக்கிறார்.
"ஹீரோயின் ஸ்வப்னா ஒரு கால் டாக்சியில் அவசர வேலையாக காஞ்சிபுரம் செல்கிறாள். அந்த கால் டாக்சியின் டிரைவர் ஹீரோ கதிர். காஞ்சிபுரம் சென்றதும் ஸ்வப்னா கதிரிடம் ஒரு அதிர்ச்சி தகவலை சொல்கிறார். அதைவிட அதிர்ச்சி தகவலை கதிர் ஸ்வப்னாவுக்கு சொல்கிறார். இருவரையும் போலீஸ் ஒரு பக்கமும், வில்லன்கள் ஒருபக்கமும் துரத்துகிறார்க்ள. சம்பந்தமே இல்லாத கதிரும், ஸ்வப்னாவும் எப்படி சம்பந்தமாகிறார்கள் என்பததான் கதை" என்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல்.