தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆண்டுதோறும் நடந்து வரும் மிகப்பெரிய திரைப்பட விருது வழங்கும் விழாவான விஜய் அவார்ட்ஸ் விழா நாளை (ஏப் 25) மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பிரபுதேவா பல வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடுகிறார். அவர் "மை லைஃப் மை வே" (என் வாழ்க்கை என் வழி) என்ற தீம் பாடலுக்கு நடனம் அமைத்து ஆடுகிறார். அதனுடன் "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே" பாடலுக்கும், "போக்கிரி பொங்கல்" பாடலுக்கும் நடனம் ஆடுகிறார்.
ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமலஹாசனின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். லட்சுமி மேனன் திகில், காதல் மற்றும் பேய் பாடல்களுக்கு ஆடுகிறார். இவர்கள் தவிர பிந்து மாதவி, ராய் லட்சுமி, இனியா, நந்திதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடனமாட இருக்கிறார்கள். பிரபுதேவா நடனங்கள் தவிர மற்ற நடனங்களுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த ஆண்டு சிறுபட்ஜெட் படங்கள்தான் அதிகமான விருதுகளை பெற இருப்பதாக ஜூரி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.