ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கலைஞர் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி மானாட மயிலாட. இதனை நடன இயக்குனர் கலா மாஸ்டர் இயக்கி வருகிறார். பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். தற்போது மானாட மயிலாட நிகழ்ச்சியின் 10வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நடன நிகழ்ச்சிகளில் ஏம்ஸ் ரூம் இல்யூஷன் என்ற ஒரு முறை உள்ளது. அதாவது விதவமான மேடை அமைத்து பார்வையாளர்களை ஏமாற்றுவது. ஒரே மேடையில் ஒருவரே இருவராக தோன்றுவது. ஒருவர் மிக உயரமாகவும், ஒருவர் உயரம் குறைந்தும் தெரிவது இப்படியான மாயத் தோற்றங்களை உருவாக்குவது இந்த வகை.
இந்த ஏம்ஸ் ரூம் இல்லூஷன் டைப் நிகழ்ச்சி மானாட மயிலாடவில்தான் உலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்டமாகவும், அதிக நேரமும் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் ரிக்கார்ட் பிரதிநிதிகள் பார்த்தனர். அதன் பிறகு அதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இணைத்தனர். கின்னஸ் ரிக்கார்ட் அதிகாரி லூசியா சினிகேலினியி லண்டனில் இருந்து வந்து கின்னஸ் சான்றிதழை நிகழ்ச்சி இயக்குனர் கலா மாஸ்டரிடம் வழங்கிச் சென்றார்.