ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கீர்த்தி தற்போது நாளைய இயக்குனர் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கீர்த்திக்கு நிறைய சினிமா வாய்ப்புகளும் வருகிறது. ஆனால் பெற்றவர்கள் சம்மதித்தால் நடிப்பேன் என்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாளைய இயக்குனர் நிகழ்ச்சி பெரும்பாலும் ஆண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் உற்சாகமாக அதில் பணியாற்றுகிறேன். முன்பு திரைப்படங்களை அதிகம் பார்க்க மாட்டேன். தற்போது நிறைய படங்கள் பார்க்கிறேன். இன்றைக்கு திறமையான பல இயக்குனர்களை தந்திருப்பது நாளைய இயக்குனர் நிகழ்ச்சிதான். அந்த வகையில் எனக்கு சந்தோஷம்தான். அதில் நிறைய இயக்குனர்கள் என்னை நடிக்கவும் அழைத்தார்கள். ஆனால் எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. ஒருவேளை நல்ல கேரக்டர் அமைந்து அதற்கு எனது அப்பாவும், அம்மாவும் அனுமதித்தால் நடிக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் கீர்த்தி.