ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிருகம், உயிர், சிந்து சமவெளி என சர்ச்சை படங்களை இயக்கிய சாமி, அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து கங்காரு என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்ஜூன், வர்ஷா, ப்ரியங்கா, தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த கங்காரு படம் ஒருவழியாக வருகிற ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
கங்காரு படம் பற்றி இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அர்ஜூன் கூறியதாவது, நான் படித்தது பி.இ., சினிமா மீது கொண்ட 100 சதவீத காதலால் சினிமாவுக்கு வந்தேன். மிருகம் படத்திலேயே ஆதியின் ரோலில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அது மிஸ்ஸாகிவிட்டது. அதன்பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் அண்ணனாக நடித்தேன். இந்தப்படத்தில் ஒரு முழுநீள ரோலில் நடித்துள்ளேன். ஒரே வீட்டில் வாழும் அண்ணன்-தங்கையின் பாசம் தான் கங்காரு படத்தின் கதை. இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க கொடைக்கானல் பகுதியில் நடந்தது. இங்கு ஷூட்டிங் நடந்தபோது பலமுறை காலில் செருப்பில்லாமல் நடித்தேன். குறிப்பாக ஒரு சண்டைக்காட்சியின் போது என் கால் கட்டை விரலில் உள்ள நகம் தனியாக பியித்து வெளியே வந்துவிட்டது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டு உண்மையாக நடித்தேன். கங்காரு படத்திற்கு பிறகு நிச்சயம் எனக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அர்ஜூன் கூறினார்.