ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராவணன், கடல் என தோல்விகளை சந்தித்து வந்த மணிரத்னத்திற்கு புது தெம்பை கொடுத்திருக்கிறது ஓ காதல் கண்மணி படம். மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், நித்யா மேனனும் நடித்துள்ள இப்படம் தாலிகட்டாமல் கணவன்-மனைவியாக வாழ்வதை பற்றி இப்படம் சொல்லியிருக்கிறது. அதோடு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. மணிரத்னம் இஸ் பேக் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஓ காதல் கண்மணி படம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் மணிரத்னம்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, என்னுடைய அனுமதி இன்றி ஓ காதல் கண்மணி படத்தை இணையதளங்களில் திருட்டுதனமாக வெளியிட்டுள்ளனர். இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, இணையதளத்தில் படத்தை வெளியிட்டுள்ளதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.