மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
இதென்ன வம்பா போச்சு.. மம்முட்டி அவர் பையனுக்கு பார்த்து பார்த்து தானே பெயர் வைத்திருப்பார்.. அதெப்படி ஏதேச்சையாக வைக்க முடியும் என்று கிராஸ் கேள்வி கேட்கும் ஆளா நீங்கள்..? இப்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கியுள்ள 'ஒ காதல் கண்மணி படத்தில் நடித்திருக்கிறார் இல்லையா..? படத்தில் அவரது பெயர் ஆதித்யா வரதரராஜன். சுருக்கமாக ஆதி..! அதேபோல மம்முட்டி நடித்து கிட்டத்தட்ட அதே தினத்தில் தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வெளியானது.
இந்தப்படத்தில் மனைவியை இழந்த, ஒரு பையனுக்கு தகப்பனாக நடித்திருகிறார் மம்முட்டி. படத்தில் அந்த சிறுவன் பெயரும் ஆதி தான். ஆதியாக நடித்த சிறுவனின் பெயர் சனூப் சந்தோஷ். இவன் ரேணிகுண்டா' புகழ் சனுஷாவின் தம்பி.. மணிரத்னம் படத்தில் துல்கர் ஒப்பந்தமான பின் அதில் அவரது கதாபாத்திரத்தின் ஆதி என்கிற பெயரை அடிக்கடி கேட்டதால், படத்தில் தன்னுடைய மகனாக நடித்தவருக்கும் அதையே வைக்கச்சொல்லிவிட்டாராம் மம்முட்டி. எப்படி ஒரு சென்டிமென்ட் பார்த்தீர்களா..?