ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு சென்னையில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. ஹேமமாலினி சென்னை வந்தால் அங்குதான் தங்குவார். மற்ற நேரங்களில் பூட்டிக் கிடக்கும். இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டுக்குள்ளிருந்து புகை வருவதை பார்த்த பக்கத்து வீட்டினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் இருந்த படுக்கை அறையில் இருந்து புகை வந்தது. படுக்கை, பீரோ, மேஜையில் தீபிடித்து எரிந்து கொண்டிருந்தது. வீரர்கள் தீயை அணைத்தனர். பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஏசி மிஷினில் ஏற்பட்ட மின்சார கசிவே தீவிபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பையில் உள்ள ஹேமமாலினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது மானேஜரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.