டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை நித்யா மேனனுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்துள்ள ஓகே கண்மணி படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தினை பார்த்தவர்கள் நாயகனை அகற்றி விட்டு தன்னை அந்த இடத்தில் வைத்து படத்தைப் பார்த்ததாகக் கூறும் அளவிற்கு நித்யா மேனன் திரை ரசிகர்களை தனது சின்ன சின்ன சிணுங்கல்களால் கூட கவர்ந்து விட்டார். தெலுங்கு திரையுலகில், அநேக ரசிகர்களை வைத்திருந்த நித்யா மேனனுக்கு இனி தமிழ் திரையிலும் பெரும் ரசிகர் பட்டாளம் கண்டிப்பாக உருவாகும். திரை ரசிகர்களை மட்டுமல்லாது திரைபிரபலங்களையும் நித்யா மேனன் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். ஓகே கண்மணி படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர் கெளதம் மேனன் தனது பாராட்டுகளை டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், இப்படத்தில் நடிகை நித்யா மேனன் தனது நடிப்பால் சிறைபிடித்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.