சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
கண்ணெதிரே தோன்றினாள், மஞ்னு சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களின் இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கி திரைக்கு வரவிருக்கும் படம் நட்பதிகாரம்79. இப்படத்தின் இசை வெளியீடு நடந்தது. மனித உயிர்களுக்குயிடையே ஏற்படும் நட்பு , நட்பால் ஏற்படும் காதல் இதை உணர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் விதமாக விழாவை ஏற்பாடு செய்திருந்தார் இயக்குனா¢. அந்த வகையில் கோடம்பாக்கத்தில் உள்ள திரையுலக பிரபலங்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய எஸ் பி முத்துராமன் முதல் கே ஆர்..பி.எல். தேனப்பன் என அனைவரும் திருக்குறளில் உள்ள நட்பதிகாரத்தை முன்னிலைப்படுத்தி பேசினார்கள். இப்படத்தில் தேவா ஒரு கானா பாடலை பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடலாகயிருக்குமாம் அந்தளவுக்கு வாழ்க்கை சம்பவங்களை தத்துவ வார்த்தைகளாக அமைத்து கானா பாடலை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் தீபக் நிலம்பூர். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.