சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட் இயக்குநர் ஜோயா அக்தர், தான் இயக்கியுள்ள தில் தடக்னே டூ படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, திரைநட்சத்திரங்களின் வீடுகளில் கெட் டுகெதர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் ஒருகட்டமாக, அனில் கபூர் வீட்டில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஜோயா அக்தர், அனில் கபூர், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, பட தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், பிரியங்கா சோப்ரா பேசியதாவது, இந்த நிகழ்ச்சியை, என் வீட்டில் நடத்த ஆசைப்பட்டேன், ஆனால், அங்கு சூழ்நிலை சரியில்லை என்பதால், அந்த முயற்சியை கைவிட்டதாக கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அனில் கபூர், பிரியங்கா, இதுவும் உன் வீடுதான் என்று கூறினார். இதை கேட்டவுடனே, பிரியங்கா சோப்ராவின் மகிழ்ச்சியில் அழுதுவிட்டார்...இதற்குமுன், இப்படத்தின் சிறப்புக்காட்சி, பர்ஹான் அக்தர் வீட்டில் திரையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது