ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்டார் ஜோதிகா. கணவரின் தொழிலில் அவர் தலையிடுவதில்லை என்றாலும், சில விஷயங்களில் பிடிவாதமாக இருக்கிறார். கோடைவிடுமுறையில் குடும்பத்தினருடன் சூர்யா வெளிநாட்டுக்கு பிக்னிக் வந்தே தீர வேண்டும் என்பது அதில் ஒன்று. வருடம் முழுக்க படப்பிடிப்புக்காக ஓடிக்கொண்டே இருக்கும் சூர்யாவுக்கு ஒரே ரிலாக்ஸ் வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் செல்லும் வெளிநாட்டுப்பயணம்தான் என்று நினைக்கிறாராம் ஜோதிகா.
எனவே அதை எக்காரணம் கொண்டும் தள்ளி வைக்கவோ... கேன்ஸல் பண்ணவோ விட மாட்டாராம். ஜோதிகாவின் ஆசைப்படி கடந்த சில வருடங்களாகவே கோடைவிடுமுறையில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூர்யா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே படம் மே மாதம் வெளிவருவதால் இந்த வருடம் வெளிநாடு செல்வதையே கேன்சல் பண்ணிவிட்டாராம் சூர்யா.
36 வயதினிலே படம் ரிலீஸ் ஆன உடனே அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் ஏகப்பட்ட கதைகளையும் கேட்டு வருகிறார் ஜோதிகா.