ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் போட்டியிட்டனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
பல்வேறு தெலுங்கு திரை பிரபலங்களுக்கு தேர்தலில் பங்கெடுத்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 394 ஓட்டுகள் பதிவாகின. இதில் ராஜேந்திர பிரசாத்திற்கு 237 ஓட்டுகளும், ஜெயசுதாவுக்கு 152 ஓட்டுகளும் கிடைத்தன. 5ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ராஜேந்திர பிரசாத் 85 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செயலாளர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் அணியே வெற்றி பெற்றது.