டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இன்றைய தமிழ் ரசிகர்களுக்கு 'படிக்காதவன்' படத்தில் தனுஷின் அப்பாவாய் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானவர் தான் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன் பல படங்களில் கதாநாயகனாகவும் அதன்பின் பத்து வருடங்களுக்கு மேல் இயக்குனராகவும் தனது திரையுலக வாழ்க்கையில் சீராக பயணம் செய்தவர் பிரதாப் போத்தன்.
குறிப்பாக கமல், பிரபு, கார்த்திக் ஆகியோரை வைத்து படங்களை இயக்கிய இவர், இருபது வருடத்திற்கு முன்னரே டைரக்சனை விட்டுவிட்டு குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார். கடைசியாக 1995ல் இவர் இயக்கியதும் ஒரு சாதனைப்படம் தான். பின்னே சிவாஜியும் மோகன்லாலும் இணைந்து மலையாளத்தில் நடித்த ஒரே படமான 'ஒரு யாத்ரா மொழி' படத்தை இயக்கியது வரலாற்று சாதனை அல்லாமல் வேறென்ன..?
சமீபகாலமாக மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் குணச்சித்திர நடிகராக வலம் வரும் பிரதாப் போத்தன் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதற்காக ஒரு தயாரிப்பாளருடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டார். தனக்கு பிடித்தமான தனது கனவு டீமுடன் இந்தப்படத்தை ஆரம்பிக்கப்போவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பிரதாப் போத்தன். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.