பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஒரு திரைப்பட கலைஞனுக்கு சம்பளத்தை விட கைதட்டலும், அங்கீகாரமும்தான் முக்கியம் என்பார்கள். அதற்காகத்தான் மத்திய அரசு, மாநில அரசு, சில தனியார் அமைப்புகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஆண்டு தோறும் நந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசு தன் கலைஞர்களை ஆண்டு தோறும கவுரவித்து வருகிறது. கேரள அரசு திரைப்பட கலைஞர்களை கொண்டாடுகிறது. முக்கிய நட்சத்திரங்கள் மறைந்தால் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது. உலக திரைப்பட விழாக்கள், திரைப்பட கருத்தரங்குகளை நடத்துகிறது. அரசாங்கமே முக்கிய நகரங்களில் தியேட்டர் நடத்துகிறது.
ஆனால் சினிமாத் துறையை சேர்ந்த 5 பேர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தும் திரைப்படத்துறை கண்டு கொள்ளப்படாமல் இருப்பது தமிழ்நாட்டில்தான். 1967ம் ஆண்டு திரைப்பட விருது வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் விருது வழங்கப்படவில்லை. சில ஆண்டுகள் வழங்குவதும், சில பல ஆண்டுகள் வழங்காமல் இருப்பதுமான திரைப்பட விருதுகள் ஒரு அரசியல் விளையாட்டாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடைசியாக 2008ம் ஆண்டு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு 2009ம் ஆண்டில் அது வழங்கப்பட்டது. அதன் பிறகு 2014 வரை கடந்த 6 வருடங்களாக தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, ஸ்டாலின், சரத்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்ட சினிமா தொடர்புடையவர்கள் சட்டமன்றதிலே இருக்கிறார்கள். மற்ற கோரிக்கைகள் என்றால் திரைப்பட உலகம் கேட்கமுடியும். எங்களுக்கு விருது கொடுங்கள் என்று எப்படி கேட்க முடியும்.
கடந்த 7 வருடமாக தமிழக அரசு விருதுகள் வழங்கப்படவில்லை. இனி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே தான் தனியார் சேனல்களும், தனியார் அமைப்புகளும் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி அதை படம்பிடித்து நிகழ்ச்சியாக்கி அதையும் வியாபாரம் செய்கிறார்கள். அரசு கைவிடும் விஷயங்களை தனியார்கள் எடுத்துக் கொள்வது மரபுதானே. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.