அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கரண் ஜோகர், அடுத்தப்படியாக நடிகராகவும் அவதரித்திருக்கும் படம் ''பாம்பே வெல்வெட்''. அனுராக் காஷ்யாப் இயக்கி வரும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ரவீனா டாண்டன், கே.கே.மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கரண் ஜோகருக்கு இப்போது புத்தகம் எழுதும் ஆசையும் வந்துள்ளது. சமீபத்தில், புத்தகம் வௌியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரண், இதை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய கரண் ஜோகர், இந்த புத்தகத்தை படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கும் இது போன்று புத்தகம் எழுதும் ஆசை இருக்கிறது. சிறுவயது முதலே இப்படி ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் ஒருக்கட்டத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது அந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒரு புத்தகம் எழுதுவேன் என்று கூறியுள்ளார்.