'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விஷால் கிருஷ்ணா ரெட்டி. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் கிரானைட் தொழிலதிபர் ஜி.கே.ரெட்டியின் மகன். செல்லமேவுக்கு பிறகு சண்டக்கோழி அவருக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, என தொடர் ஹிட்கள் கொடுத்த விஷாலுக்கு சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, வெடி, சமர், பட்டத்து யானை படங்கள் சறுக்கலை கொடுத்தது. அவன் இவன் தோற்றாலும் விஷாலை நல்ல நடிகனாக அடையாளம் காட்டியது.
சிறிய இடைவெளிக்கு பிறகு பாண்டிய நாடு மூலம் விட்ட இடத்தை பிடித்தார். நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள என மீண்டும் எழுந்து நின்றார். தற்போது பாயும்புலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்தும் வந்தார்.
விஷால் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகளை நெருங்கி விட்டது. சினிமாவில் மட்டுமல்லாது நியாயத்தை தட்டிக் கேட்டு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்கும் விஷாலுக்கு ரசிகர்கள் அதிகம். அதனால் தனது பத்தாண்டு சினிமா விழாவை தமிழ்நாடு, கேரளாவில் உள்ள தனது ரசிகர்களை அழைத்து கொண்டாட இருக்கிறார். வருகிற 5ந் தேதி சென்னை வானகரத்தில் உள்ள எல்.கந்தசமி திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திப்பு நடத்தி அவர்களுடன் கொண்டாடுகிறார். இதற்காக இரண்டு மாநில சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் விஷால் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
"அகில இந்திய புரட்சித் தளபதி விஷால் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் 10ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைகூட்டம் வருகிற 5ந் தேதி காலை 9 மணிக்கு வாணகரம் எல். கந்தசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் அனைத்து மாவட்ட, பகுதி, நகரம், ஒன்றியம், கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என மன்ற தலைமை நிர்வாகி வி.பாலமுருகன் மன்றத்தினருக்கு சுற்றரிக்கை அனுப்பி உள்ளார்.