ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
கிட்டத்தட்ட இரண்டு மாத சிறைவாசம் முடிந்து ஒரு வழியாக ஜாமீனில் வெளிவந்துவிட்டார் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் டாம் சாக்கோ. இவருக்கு இரண்டு நபர்கள் பொறுப்பேற்க, ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை கட்டியதின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடுதலையான சாக்கோ, தான் எந்தவிதமான போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும், இப்படி இந்த வலையில் தான் சிக்க வைக்கப்பட்டேன் என தெரியவில்லை என்றும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது முதல் வேலையாக, தான் நடிக்க ஒப்புக்கொண்டு பாதியில் நிற்கும் படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது போர்ஷனை சீக்கிரமாக முடித்து தரும் நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கைது செய்யப்பட்டபோது ரத்தத்தை சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்திருந்தனர். அதில் டாம் சாக்கோ உட்பட அந்த நான்கு பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என ரிப்போர்ட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.