இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கவிஞர் மதன் கார்க்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் எழுதியுள்ளார். இதில் பல பாடல்கள் வெற்றியும் பெற்றுள்ளது இந்நிலையில் முதல் முறையாக கராத்தேக்காரன் என்ற படத்துக்கு பாடல்கள் எழுதி மூன்று மொழிகளில் வசனம் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், வியட்நாம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பைட் மாஸ்டராக இருந்த ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். இதுபற்றி மதன் கார்க்கியிடம் கேட்டபோது ஒரு படத்துக்கு வசனம் ரொம்பவும் முக்கியம் நீளமான வசனங்கள் இருந்தால் ரசிக்கமாட்டார்கள். அதே நேரத்தில் தேவையான இடத்தில் சரியான வசனம் இருந்தால் படத்திற்கு பலமாக இருக்கும். படத்திற்கு எனக்கு தெரிந்த வரை சிறப்பாக எழுதிக்கொடுத்திருக்கிறேன் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து எழுதுவேன் என்கிறார் கார்க்கி.