Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

உத்தம வில்லனை உலகம் கொண்டாடும்: ரமேஷ் அரவிந்த் பேட்டி!

01 ஏப், 2015 - 12:43 IST
எழுத்தின் அளவு:
World-will-celebrate-Uthamavillain-says-Ramesh-Aravind

உலக நாயகன் கமல் நடித்துள்ள உத்தம வில்லன் தான் தமிழ் சினிமா அடுத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். எதையும் வித்தியாசமாக யோசித்து, மற்றவர்கள் வியக்கிற வண்ணம் செய்வதுதான் கமல் பாணி. வியாபார ரீதியாக சில வெற்றி பெறலாம், சில தோல்வி அடையலாம். ஆனாலும் கமலின் முயற்சிக்கும், உழைப்புக்கும் தோல்வியே கிடையாது. அன்பே சிவம், ஹே ராம், குருதிப்புணல், ஆளவந்தான் தோல்விப் படங்கள்தான். ஆனால் காலம் கடந்தும் அது பேசப்படுகிறது. அதுதான் கமல்.


உத்தம வில்லன் பேசப்படுகிற படமாகவும், கமர்ஷில் கல்லாகட்டும் படமாகவும் உருவாகியிருக்கிறது. உருவாக்கி கொண்டிருப்பவர் ரமேஷ் அரவிந்த். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கான முஸ்தீபில் இறுதிக்கட்டப் பணியில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் ரமேஷ் அரவிந்த் அளித்த பேட்டி...


* உத்தம வில்லனை கண்ணில் காட்ட ரொம்பவே காக்க வைக்கிறீங்களே?


அது உண்மைதான். வேண்டுமென்றே காக்க வைக்கவில்லை. அத்தனை வேலைகள் இருக்கிறது. ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறோம். விரைவில் உத்தம வில்லன் உங்களை சந்திப்பார். உத்தம வில்லனை உலகம் கொண்டாடும்.


* உத்தம வில்லனின் இயக்குனர் ஆனது எப்படி?


எனது குரு பாலச்சந்தர் சார் எனக்கு கொடுத்தது சினிமா வாழ்க்கை மட்டுமல்ல. கமல் என்கிற நல்ல நண்பரையும்தான். புன்னகை மன்னன் படத்தில் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட நட்பு இன்று வரை அப்படியே தொடர்கிறது. எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் எங்களுக்குள் உள்ள நட்பு மட்டும் ஈரம் குறையாமல் இருக்கிறது.


நான் கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போது. "எத்தனை நாளைக்குத்தான் ரமேஷ் ஒரே வேலையை செய்துகிட்டிருப்பே உன் அனுபவத்தை வைத்து படம் இயக்கேன்" என்று சொன்னவர் அவர். அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் எனது முதல் கன்னடப்படத்தில் நடித்துக் கொடுத்தார். அன்று முதல் இயக்குனர் ஆனேன். அடுத்து "சீக்கிரம் தமிழ் படம் பண்ணு" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வாய்ப்பையும் அவரே கொடுத்தார். என்னிடம் வேறொரு கதையை சொல்லி அதைத்தான் இயக்கச் சொன்னார். மறுநாள் அது சம்பந்தமாக பேசச் சென்றபோது உத்தம வில்லன் கதையை சொல்லி இது எப்படி இருக்கு? என்று கேட்டார். பிரமித்து போனேன். மிரமிக்க வைக்கிற கதை. ஒரு இயக்குனருக்கு சவாலான விஷயம். இதையே நான் பண்ணுகிறேன் என்றேன் அப்படித்தான் ஆரம்பித்தது உத்தம வில்லன்.


* கமல் நடிக்கும் படங்களில் பாதி இயக்குனர் வேலையை அவரே பார்த்து விடுவாராமே?


ஒவ்வொரு பிரேமிலும் அவரது பங்கு இருக்கும். அது அவருக்கு இருக்கும் கலை ஆர்வம். ஒரு மாணவனை வேலை செய்யச் சொல்லிவிட்டு அவன் சரியாக செய்கிறானா? என்று ஆசிரியர் மேற்பார்வை செய்வதில்லையா அதுமாதிரிதான் இதுவும். எனக்கும், கமலுக்கும் ஒரே மனவோட்டம் இருப்பதால் அவர் நினைப்பதை நான் செயல்படுத்துவேன். அந்த நம்பிக்கையில்தான் இவ்வளவு பெரிய ப்ராஜக்டை என்னை நம்பி கொடுத்தார்.


* பூர்வ ஜென்ம கதை என்கிறார்களே?


உத்தம வில்லன் கதை இதுதான் என்று நூற்றுக் கணக்கான கதைகள் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் அவைகளும் சுவாரஸ்மாகத்தான் இருக்கிறது. 8ம் நூற்றாண்டில் நடக்கிற கதையில் கமல் ஒரு கூத்து கலைஞர். நிகழ்கால கதையில் கமல் ஒரு புகழ்பெற்ற நடிகர். இருவரின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? இருவரும் யார் என்பதுதான் கதை. இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று ஆயிரம் யோசிக்கலாம். நீங்கள் யோசிக்காத ஒரு விஷயம்தான் படத்தில் இருக்கிறது.


* கமல் ஆடும் நடனம் வித்தியாசமாக இருக்கிறதே?


அது நாங்கள் உருவாக்கிய புதிய கலை என்று சொல்லலாம். கதை நடக்கும் 8ம் நூற்றாண்டில் தமிழ்நாடு என்ற தனியாக இல்லை தென் மாநிலங்கள் இணைந்த ஒரு தேசமாக இருந்தது. அப்போது என்ன மாதிரி கலைகள் இருந்தது என்பதற்கான குறிப்புகள் இல்லை. அதனால் கேரளாவில் இப்போதும் இருக்கும் தெய்யம் கலையையும், தமிழ்நாட்டில் இருக்கும் வில்லுப்பாட்டு கலையையும் இணைத்து நாங்களே புதிதாக ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். கமலின் உழைப்பில் பாதி இந்த நடனத்தில் இருக்கிறது. படம் வெளிவந்த பிறகு இது பரவலாக பேசப்படும்.


* மூத்த இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத்தை இயக்கிய அனுபவம் பற்றி...?


அதை அனுபவம் என்றே சொல்ல முடியாது. அது ஒரு வரம். கடவுள் கொடுத்த வரம். எத்தனை நடிகர்களை, சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அவர்களையும், உலக நாயகனையும் இணைத்து இயக்குகிற வாய்ப்பு இந்த ஜென்மத்தில் இனி எனக்கு கிடைக்காது. தாங்கள் பெரிய இயக்குனர்கள் என்ற எந்த கிரீடத்தையும் சுமந்து கொள்ளாமல் புதிதாக நடிக்க வந்தவர்களைபோல இயக்குனராகிய நான் சொல்வதை உன்னிப்பாக கேட்டு, இப்படி செய்தால் நன்றாக இருக்குமா? அப்படி செய்தால் நன்றாக இருக்குமா என்று என்னிடம் அவர்கள் கேட்டு நடித்தது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. "டேய் ரமேஷ் படத்தை முடிச்சிட்டு முதல் ஷோ எனக்குத்தான் போட்டு காட்டணும்" என்றார். அதை பார்க்காமலே சென்று விட்டார். அதுதான் மிகப்பெரிய வலி.


* பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், பார்வதி நாயர் என நான்கு ஹீரோயின்கள் இருக்கிறார்களே?


ஊர்வசியை விட்டு விட்டீர்கள். அவரையும் சேர்த்து 5 ஹீரோயின்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பங்கு இருக்கிறது. தங்கள் ஏரியாவில் அவர்கள் ஸ்கோர் பண்ணுவார்கள். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரவர் திறமையை வெளிக்காட்ட தனித்தனி களங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. படம் வெளிவந்த பிறகுதான் இத்தனை ஹீரோயின்கள் ஏன் என்பது தெரிய வரும்.


* தயாரிப்பாளர் லிங்குசாமி பற்றி....?


அவரும் ஒரு இயக்குனர் என்பதால் ஒரு இயக்குனருக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதனை கொடுத்தார். கதையை கேட்டு ஓகே சொன்ன பிறகு அவர் எந்த விஷயத்திலும் தலையிட்டதில்லை. இது தேவையா, அது தேவையா என்று கேள்வி கேட்டதில்லை. கேட்டதை கேட்ட நேரத்தில் கொடுத்தார் அவரது தம்பி சுபாஷ் சந்திரபோஸ். இதற்கு பதிலாக அவர்களுக்கு நான் தர வேண்டியது வெற்றி மட்டும்தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in