டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாரதிராஜாவால் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ப்ரியாமணி. அதன் பிறகு அது ஒரு கனா காலம், மது படங்களில் நடித்தார். பருத்தி வீரன் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தேசிய விருதின் மூலம் புகழ்பெற்றார். ஆனால் அதற்கு பிறகுதான் அவருக்கு சறுக்கல் தொடங்கியது. காரணம் அவர் கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்ததுதான். பருத்தி வீரனுக்கு பிறகு வெளிவந்த மலைக்கோட்டை, ஆறுமுகம், படங்களில் கிளாமராக நடித்தார். அது அவருக்கு உதவில்லை. அதன் பிறகு தெலுங்கு பக்கம் போய்விட்டார். 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் படம்தான் அவர் கடைசியாக நடித்த தமிழ் படம். அதன் பிறகு சாருலதா என்ற கன்னட படம் தமிழில் டப்பாகி வெளிவந்தது. தற்போது மீண்டும் அவர் 6 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்.
மிஷ்கின் உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா என்பவர் காமெடி படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கதை, திரைக்கதையை எழுதியிருக்கும் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். இதில் கற்றது தமிழ் ராம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ப்ரியாமணி ஹீரோயினாக நடிக்கிறார். இன்னுமொரு இளம் ஹீரோ நடிக்கிறார். அவர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.