இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ஒரு படம் படப்பிடிப்பு ஆரம்பமாவதிலிருந்து அதைப் பற்றிய பல செய்திகள் வந்தாலும் அப்போதெல்லாம் கண்டு கொள்ளாமல், பட வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன் அந்தப் படத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக சிலர் எதிர்க்க நினைப்பது திரையுலகத்திற்குள் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்ட 'கொம்பன்' படப் பிரச்சனைக்காக நேற்று தமிழ்நாடு திரையுலகக் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
வெளியீட்டிற்கு முன்னர்தான் வழக்கு தொடுப்பது, அப்போதுதான் பிரச்சனைகளைக் கிளப்புவது பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் படத்திற்கு எவ்வளவு பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும் என்று அவர்கள் நேற்று விவரித்தனர்.
இந்த நிலையில் 'கொம்பன்' படத்தின் நாயகன் கார்த்தியின் அண்ணன் சூர்யா இது குறித்து தெரிவித்துள்ளதாவது, “கொம்பன்' படம் அழகான உறவுகளைப் பற்றிய படம். படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஏன் இப்படி திடீரென உணர்வுபூர்வமான நிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை,” என அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பிரச்சனைக்கு ஆதரவளித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், மீடியாக்கள், ரசிகர்கள் ஆகியோரின் மனமார்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்சார் போர்டு முடிவை ஏற்றுக் கொண்டு, அதற்கு மரியாதை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.