Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் உடன் நடிக்க விருப்பம் : சன்னி லியோன்

31 மார், 2015 - 15:20 IST
எழுத்தின் அளவு:
Sunny-Leone-opens-about-Ek-Paheli-Leela

ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த சன்னி லியோன், படத்தில் தனது கேரக்டர் மற்றும் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சல்மான் கான் உடனான நட்பு குறித்து நம்மிடம் மனம் திறக்கிறார்.....


ஏக் பஹேலி லீலா படத்தில் நடிக்க ஏன் சம்மதித்தீர்கள்?


படத்தின் கதையை கேட்கும்போதே, எனக்கு இனம்புரியாத உற்சாகம் ஏற்பட்டது. இப்படம், தனக்கு புதுவிதமான அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதனடிப்படையில், இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஒரே மாதிரியான கேரக்டர்களை தொடர்ந்து செய்துவந்தால் அலுப்பு மட்டுமே ஏற்படும். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அந்நேரத்தில் தான் இப்பட வாய்ப்பு கிடைத்தது. படத்தில் தனக்கு வலிமையான கதாபாத்திரம் இருந்ததால், உடனடியாக சம்மதித்துவிட்டேன்.


இப்படத்திற்காக எவ்வாறு உங்களை தயார்படுத்திக்கொண்டீர்கள்?


ஏக் பஹேலி லீலா படத்தில் நான் மீரா மற்றும் லீலா என்ற இரு கேரக்டர்களில் நடித்துள்ளேன். இரண்டுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான கேரக்டர்கள். இதற்காக நான் தன்னை தயார்படுத்திக்கொள்கையில் மிகுந்த சிரமப்பட்டேன். அதில் மீரா கேரக்டர், தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் ஆகும். சூப்பர் மாடல் பெண்ணான மீரா, லண்டனில் இருந்து ராஜஸ்தான் வருகிறார். அங்கு இளவரசரை சந்திக்கும் அவள், அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்துகொண்டு இளவரசி ஆகிறாள். தினமும் விதவிதமான அழகிய ஆடைகளை அணிகிறாள். முதல் சில தினங்களுக்கு, அந்த வகை ஆடைகளை அணிய நன்றாக இருந்தது. அப்போது தான் உணர்ந்தேன், ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும், ஒரு இளவரசி ஒளிந்திருக்கிறாள் என்று....லீலா கிராமத்துப் பெண் கேரக்டர். இதற்காக, எனது எனது தோலின் நிறத்தை கறுமையாக மாற்றிக்கொண்டேன். லீலா கேரக்டர், மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்படத்திற்காக, ராஜஸ்தானிய மொழி பேச கற்றுக்கொண்டேன். அம்மொழி மிகவும் கஷ்டமாக இருந்தது. படம் முடிந்தபின், அக்காட்சிகளை போட்டு பார்த்தபிறகு, உழைப்பின் அருமை தெரிந்தது. என் திரைவாழ்க்கையில் முதல்முறையாக, மிகுந்த கஷ்டப்பட்டு இப்படத்தில் நடித்துள்ளேன் என்றே கூற வேண்டும்.


கடந்த காலத்தை மனதில் வைத்து சில நடிகர்கள் உங்களை புறக்கணிப்பது குறித்து...


நீங்கள் மட்டுமல்ல...என்னை சந்தி்ககும் எல்லோரும் என்னிடம் இதே கேள்வியை தான் கேட்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லும் ஒரே பதில், நான் மக்களுக்காகவே நடிக்கிறேன், அதாவது என்னை விரும்பும் மக்களுக்காகவே நான் நடிக்கிறேன். என் கடந்த காலத்தை பார்த்து என்னை வெறுப்பவர்களை, நான் எப்போதும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புவதில்லை. என்னை விரும்பும் மக்களுக்காகவே, நடிப்பதில் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. என்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பலர் பயப்படுகின்றனர். ஆனால், அது தேவையில்லாத ஒன்று என்றே நான் சொல்லுவேன்.


2 மாதங்களில் 3 படங்கள் வெளியாகவுள்ளதே?


இல்லை. இப்போதைக்கு 2 படங்கள் தான் வெளியாக உள்ளது. கூடிய விரைவில் மூன்றாவது படமும் வெளியாகும். நான் தற்போது ஏக் பஹேஹல லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளிலேயே தற்போது முழுக்கவனமும் உள்ளது. இப்படம் ரிலீசான பின்னரே, மற்ற படங்கள் குறித்து யோசிப்பேன்.


ராகினி எம்எம்எஸ்2 , ஜிஸ்ம்2 படத்தின் வெற்றி குறித்து


நான் எப்போதும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. மற்றவர்களை போன்று, வெற்றி பெறும்போது கொண்டாடுவதும், படம் தோல்வியடைந்துவிட்டால், சோர்ந்துபோவதல்ல என் கேரக்டர். நான் நடித்த ஜாக்பாட் படம் தோல்வியடைந்தபோது, மனம் துவளாமல், தோல்விக்கான காரணங்கள், மற்றும் அதில் எனது பங்கு குறித்து என்னை நானே சோதித்துக்கொண்டேன். பின் அந்த தவறுகளையெல்லாம் திருத்தியபின்னரே, ராகினி எம்.எம்.எஸ்-2 படத்தில் நடித்தேன். படம் வெற்றி பெற்றது.


யாருடன் இணைந்து நடிக்க விருப்பம்?


சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே எனது நீண்டநாள் கனவு. சல்மான் கான் சிறந்த மனிதர். எந்த நிகழ்ச்சியிலும், எப்போது பார்த்தாலும் அனைவரிடத்திலும் மரியாதையை கடைபிடிப்பவர். நான் பாலிவுட்டில் நடிக்க வந்தவுடனே, முதல் ஆளாக வந்து வாழ்த்து கூறியவர் சல்மான் கான் தான். ஒரு உண்மையை சொல்லவேண்டுமென்றால், இதுவரை, என்னிடம் அதுபோன்ற வாழ்த்தை யாரும் கூறியதில்லை. அதேபோல், ஷாரூக் கானும் சிறந்த மனிதர். சல்மான் கான் உடன் இணைந்து நடிப்பதை, நான் பெரும் சவாலாக கருதுவதாக சன்னி லியோன் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in