பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'லிங்கா' பிரச்சனை தொடர்பாக நாளுக்கு நாள் வரும் அறிக்கைகளைப் பார்த்து ஏன்தான் இப்படி ஒரு படத்தை எடுத்து நடித்தோமோ என்று ரஜினிகாந்த்தே வருத்தப்பட்டுப் போயிருப்பார். படம் ஆரம்பமான நாளிலிருந்தே பிரச்சனை மேல் பிரச்சனையாக தொடர்ந்து ஷுட்டிங் நடந்து முடிந்து ஒரு வழியாக ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று படம் வெளிவந்தது.
வெளியான சில நாட்களுக்குள்ளேயே படம் மாபெரும் தோல்வி என படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களே அறிவிக்காத குறையாக எங்களுக்கு நஷ்டத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று ஆரம்பித்தனர். தொடர்ந்து எவ்வளவு செய்தும் அந்தப் பிரச்னை இதுவரை முடியாமல் இழுவையோ.....இழுவை...என இழுத்துக் கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்தும் ஒரு வழியாக நஷ்டத்தில் குறிப்பிட்ட தொகையைத் தர சம்மதித்து கடந்த வாரம் அதற்கான தொகையையும் கொடுத்து விட்டார். ஆனால், அந்தப் பங்கைப் பிரிப்பதில் தொடர்ந்து தகராறு மேல் தகராறு நடந்து கொண்டு வருவதாக திரையுலகத்தினரே கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
இத்தனை நாட்களாக இந்தப் பிரச்சனை குறித்து , இது வரை கருத்து சொல்லாதிருந்த தமிழ்நாடு, கேரளா வினியோக உரிமையை வாங்கிய வேந்தர் மூவீஸும் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தியேட்டர்காரர்கள், மீடியேட்டர்கள், வினியோகஸ்தர்கள், படத்தைத் தயாரித்தவர்கள், தற்போது பஞ்சாயத்து பேசி வரும் சங்கத்தினர் என அனைவருமே இந்தப் பிரச்சனையை நல்ல படியாக முடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.