'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஒரு காலத்தில் படத்தின் தலைப்பு மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் இல்லையென்றால் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள். என்னோட படத்துக்கு புதிய வார்ப்புகள் என்று தலைப்பு வைத்தபோது, இது என்ன வார்ப்புகள் மக்களுக்கு இந்த வார்த்தை புரியுமா என்றார்கள். இப்போது எப்படியெல்லாம் படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது. என் சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் மாறி வருவோம் என்று வயா மீடியாவில் நிழல்கள் படத்தை எடுத்தேன். படம் தோற்றது. அதற்கு பிறகு என் பாதையை மாற்றி கொண்டேன். ஆனால் இப்போது இளைஞர்கள் புதுசு புதுசாக சிந்தித்து படங்கள் எடுக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அதே நேரத்தில் மூத்த கலைஞர் என்னை ஜாம்பவான் என்று அழைக்கிறார்கள். இனி அப்படி என்னை கூப்பிடவேண்டாம். என்னை விட ஜாம்பவான்கள் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் ஜாம்பவான்கள். சினிமாவுக்கு ஒப்பனை அவசியம் தேவை. இப்போது அது தேவை இல்லை என்கிற ஒரு நிலையை படைப்பாளிகள் உருவாகி விட்டார்கள். அவர்கள் தான் ஜாம்பவான்கள் என்கிறார் இயக்குனர் பாரதிராஜா.