‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படத்தை சுந்தரபாண்டியன் இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் வருகிற 2ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் கொம்பன் படம் ஒரு ஜாதியை உயர்த்தியும், ஒரு ஜாதியை தாழ்த்தியும் எடுக்கப்பட்டிருப்பதாக சில ஜாதி சங்க தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். சிலர் வழக்கு போட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பல நல்ல திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருக்கும் நிறுவனம். ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமிமேனன் நடித்து, முத்தையா இயக்கதில் வெளியாக இருக்கும் கொம்பன் திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியை குறிக்கும் காட்சியமைப்போ, வசனங்களோ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் சம்பந்தமான கதை. இதில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தியோ, அல்லது குறிப்பிட்ட ஜாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் கொம்பன் திரைப்படம் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. படம் வெளிவந்தவுடன் இவை அனைத்தும் அடிப்படையற்றவை என்பது அனைவருக்கும் தெரியவரும். பல கோடி செலவில், பலரது கடின உழைப்பில் உருவாகியுள்ள கொம்பன் திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.