துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான கொலை வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2002ல் நடந்த விபத்துக்கு காரணமான காரை, சல்மான் ஓட்டவில்லை என்றும், அவரின் டிரைவர் அந்த காரை தானே ஓட்டியதாகவும், கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த, 2002ல், மும்பை நகர வீதியில் தாறுமாறாக ஓடிய பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கார், சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில், ஒருவர் பலியானார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த மும்பை போலீசார், சல்மான் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கடந்த, 13 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் மும்பை கோர்ட்டில் ஆஜரான, சல்மான் கானின் கார் டிரைவர் அசோக், விபத்து நடந்த அன்று, அந்த காரை, சல்மான் கான் ஓட்டவில்லை என்றும், தானே அந்த காரை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவித்தார். இவ்வாறு கூறுவதற்காக, சல்மான் கான் தனக்கு பணம் கொடுக்கவில்லை எனவும், தான் யாராலும் மிரட்டப்படவில்லை என்றும் கூறினார். டிரைவர் அசோக்கின் வாக்குமூலத்தால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.