ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயன் வௌ்ளித்திரையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஏராளமான பேர் சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வரிசையில் வந்திருப்பவர் மா.கா.பா.ஆனந்த். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மா.கா.பா., வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் வௌ்ளித்திரைக்கு வந்தார். இப்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்தப்படியாக சிருஷ்டி டாங்கே உடன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “நவரச திலகம்“ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் தான் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார். ராஜ்கபூர், பூபதி பாண்டியன் போன்றவர்களின் உதவி இயக்குநராக இருந்த காம்ரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் காம்ரன் கூறுகையில், நம்மை சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில நவரச திலகங்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை! இதை 90 சதவீதம் காமெடி கலந்து பேமிலி என்டர்டெயின்மென் படமாக உருவாக்கி வருகிறோம். பொள்ளாச்சியில் 60 சதவீதம் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்து விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது என்றார்.